உள்ளூர் செய்திகள் (District)
மீஞ்சூர் அருகே ரெயில் நிலையத்தி்ல் கஞ்சா விற்றவர் கைது
- ரெயில் பயணிகளுக்கு சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது.
- போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு ரெயில் நிலையம் அருகே இளைஞர்கள் மற்றும் ரெயில் பயணிகளுக்கு சிறு, சிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவி உதவி ஆய்வாளர் விஜய் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது போலீசை கண்டதும் கஞ்சா பொட்டலங்களை கீழே போட்டு விட்டு தப்பி ஓடியவரை போலீசார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
அவர் மீஞ்சூரை அடுத்த கேசவபுரம் பகுதியைச் சேர்ந்த பசுபதி (28) என்பதும், இவர் மீது பல குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரிடம் இருந்து 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இது குறித்து மீஞ்சூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.