உள்ளூர் செய்திகள்

பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா கேட்டு கிராம மக்கள் முற்றுகை

Published On 2023-03-28 07:49 GMT   |   Update On 2023-03-28 07:49 GMT
  • 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
  • பட்டா வழங்ககோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த ஆண்டார் குப்பம் ஊராட்சிக்குட்பட்ட போரக்ஸ் நகரில் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வரும் இப்பகுதி மக்கள் பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை.

இதனால் அவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் பட்டா வழங்ககோரி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட சுமார் 100-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் அவர்கள் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதனிடம் பட்டா வழங்கக்கோரி மனு அளித்துள்ளனர். இதனால் கோட்டாட்சியர் அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News