உள்ளூர் செய்திகள் (District)

சேலம் கன்னங்குறிச்சியில் சிறை வார்டன் மனைவி மர்ம மரணம்

Published On 2022-07-29 08:12 GMT   |   Update On 2022-07-29 08:12 GMT
  • சின்ன திருப்பதி பெருமாள் கோவில் பின்புறம் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது.
  • கிணற்றில் இன்று காலை 80 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக மிதந்தார்.

சேலம்:

சேலம் கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி பெருமாள் கோவில் பின்புறம் செந்தில்நாதன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணறு உள்ளது.

இந்த கிணற்றில் இன்று காலை 80 வயது மதிக்க தக்க மூதாட்டி ஒருவர் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அந்த பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சம்பவம் குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினருடன் இணைந்து அவரை மீட்டனர்.

கிணற்றில் பிணமாக மிதந்தது சேலம் அஸ்தம்பட்டி ஜான்சன்பேட்டை மேற்கு தெருவை சேர்ந்த வேலாயுதம் என்பவரது மனைவி சீரங்காயி (80) என்பது தெரிய வந்தது. வேலாயுதம் மத்திய சிறையில் வார்டனாக இருந்த போது 1984-ம் ஆண்டு இறந்து விட்டார். சீரங்காயி தற்போது பேரன் கார்த்திக்கேயனுடன் தங்கியிருந்ததும், பேரனுடன் சண்டை போட்டு விட்டு வெளியில் சுற்றி வந்ததும் காணமல் போனவரை கடந்த 2 நாட்களாக தேடி வந்த நிலையில் தற்போது பிணமாக மிதந்ததும் தெரிய வந்தது.

இதனால் அவர் தற்கொலை செய்தாரா, அல்லது தவறி விழுந்து இறந்தாரா?  என்பது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிைடையே அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News