உள்ளூர் செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே 6 பேர் கைது- வெடிகுண்டு வீசி பயிற்சி எடுத்த கும்பல்

Published On 2022-07-03 10:00 GMT   |   Update On 2022-07-03 10:00 GMT
  • பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
  • அவர்கள் வெடிகுண்டு வீசியும் பயிற்சி எடுத்து உள்ளனர்.

ஸ்ரீபெரும்புதூர்:

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியில் உள்ள தோட்டத்தில் பதுங்கி இருந்த அதே பகுதியை சேர்ந்த விஜய், டேவிட் உள்பட 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மான் கொம்பு, கத்தி, நாட்டு வெடிகுண்டுகள், அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அவர்கள் பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை தீர்த்து கட்ட திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது. இதற்காக அவர்கள் வெடிகுண்டு வீசியும் பயிற்சி எடுத்து உள்ளனர். இது போலீசாரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர்களுடன் தொடர்புடையவர்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News