உள்ளூர் செய்திகள் (District)

திருத்தணியில் குளத்தில் மூழ்கி சென்னை பக்தர் பலி

Published On 2022-11-09 06:21 GMT   |   Update On 2022-11-09 06:21 GMT
  • திருத்தணி அருகே படாசெட்டி குளம் உள்ளது. இதில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார்.
  • திருத்தணி கோவிலுக்கு வந்தபோது குளத்தில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.

திருத்தணி அருகே படாசெட்டி குளம் உள்ளது. இதில் ஆண் ஒருவர் பிணமாக மிதந்தார். தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

குளத்தின் அருகே கிடந்த அவரது ஆடையில் உள்ள அடையாள அட்டையை வைத்து பலியானது அம்பத்தூர் பகுதியை சேர்ந்த மயில்சாமி (50) என்பது தெரியவந்தது. திருத்தணி கோவிலுக்கு வந்தபோது குளத்தில் மூழ்கி அவர் இறந்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது பற்றி மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Similar News