உள்ளூர் செய்திகள் (District)
திருவள்ளூர் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
- உடல் நிலை பாதிக்கப்பட்ட அசோக்கு மாரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த புன்னபாக்கம், மந்தவெளி தெருவை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 29). கூலித் தொழிலாளி. இவரை கடந்த 1-ந் தேதி பாம்பு கடித்தது. இதில் உடல் நிலை பாதிக்கப்பட்ட அசோக்கு மாரை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அசோக்குமார் இறந்தார். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.