உள்ளூர் செய்திகள் (District)
வடபழனியில் சாப்ட்வேர் நிறுவனத்தில் லேப்டாப் திருடிய வாலிபர் கைது
- பரூக் அப்துல்லா என்பவர் கைவரிசை காட்டி லேப்டாப்களை திருடி சென்றது தெரியவந்தது.
- போலீசார் கைது செய்து 7 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர்.
வடபழனி, வ.வு.சி 1-வது மெயின் ரோட்டில் சாப்ட்வேர் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கிருந்த 7 விலை உயர்ந்த லேப்டாப்கள் திருடு போய் இருந்தது. இதுகுறித்து வடபழனி போலீசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணையில் கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த பரூக் அப்துல்லா என்பவர் கைவரிசை காட்டி லேப்டாப்களை திருடி சென்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து 7 லேப்டாப்களையும் பறிமுதல் செய்தனர்.