உள்ளூர் செய்திகள் (District)

வானகரம் அருகே தீபாவளி சீட்டு நடத்தி தலைமறைவானவர் விபத்தில் பலி

Published On 2023-11-03 10:05 GMT   |   Update On 2023-11-03 10:05 GMT
  • தீபாவளி சீட்டு நடத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாக இருந்து வந்தது தெரிந்தது.
  • போலீசில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்து உள்ளதும் தெரியவந்தது.

போரூர்:

சைதாப்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேஷ் (வயது45). அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர் நேற்று காலை வானகரம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்ற போது லாரி மோதி பலியானார். விசாரணையில் அவர் தீபாவளி சீட்டு நடத்திவிட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் தலைமறைவாக இருந்து வந்தது தெரிந்தது.

மேலும் கணேஷ் பலகோடி ரூபாய் வரை பணம் வசூலித்து இருப்பதும் இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் தெரிவித்து உள்ளதும் தெரியவந்தது.

Tags:    

Similar News