உள்ளூர் செய்திகள் (District)

பொன்னேரி அருகே இளம்பெண் மாயம்

Published On 2022-10-02 09:45 GMT   |   Update On 2022-10-02 09:45 GMT
  • உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
  • வாசுகி, கணவருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.

பொன்னேரி:

பொன்னேரியை அடுத்த பெரும்பேடுபேட்டை, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுகி (வயது 28). கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடுதிரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அப்போது வாசுகி, கணவருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Similar News