உள்ளூர் செய்திகள் (District)
- உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
- வாசுகி, கணவருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பெரும்பேடுபேட்டை, விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுகி (வயது 28). கடந்த மாதம் 28-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் பின்னர் வீடுதிரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் பொன்னேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அப்போது வாசுகி, கணவருக்கு எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.