உள்ளூர் செய்திகள்

பார் உரிமையாளரை மிரட்டி கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது

Published On 2022-06-28 08:47 GMT   |   Update On 2022-06-28 08:47 GMT
  • திருவள்ளுவர் சாலைைய சேர்ந்தவர் செல்லதுரை இவர் கோட்டூர்புரம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார்.
  • கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

சென்னை:

சென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலைைய சேர்ந்தவர் செல்லதுரை இவர் கோட்டூர்புரம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பாரில் இருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.1,10 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார்.

இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். பணம் பறித்ததாக தரமணியை சேர்ந்த ஏழுமலை என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News