உள்ளூர் செய்திகள்
பார் உரிமையாளரை மிரட்டி கத்தி முனையில் பணம் பறித்தவர் கைது
- திருவள்ளுவர் சாலைைய சேர்ந்தவர் செல்லதுரை இவர் கோட்டூர்புரம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார்.
- கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னை:
சென்னை, தேனாம்பேட்டை, திருவள்ளுவர் சாலைைய சேர்ந்தவர் செல்லதுரை இவர் கோட்டூர்புரம் பகுதியில் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் பாரில் இருந்த போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் கத்தியைக்காட்டி மிரட்டி ரூ.1,10 பணத்தை பறித்துக்கொண்டு தப்பினார்.
இதுபற்றி கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். பணம் பறித்ததாக தரமணியை சேர்ந்த ஏழுமலை என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.