உள்ளூர் செய்திகள் (District)
கோயம்பேடு பஸ் நிலையத்தில் வாலிபர் திடீர் மரணம்
- சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அகமது மொய்தீன் (45) சமையல்காரர்.
- எப்படி இறந்தார் என்பது குறித்து பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போரூர்:
சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அகமது மொய்தீன் (45) சமையல்காரர். இவர் நேற்று இரவு 8மணி அளவில் வெளியூர் செல்வதற்காக கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது திடீரென மொய்தீன் மயங்கி கீழே விழுந்தார். அக்கம்பக்கம் உள்ளவர்கள் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் மொய்தீன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பஸ் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.