உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் உருட்டுக்கட்டையால் அடித்து வாலிபர் கொலை

Published On 2023-05-05 09:27 GMT   |   Update On 2023-05-05 09:27 GMT
  • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர்.
  • நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குனியமுத்தூர்,

கோவை குனியமுத்தூர் ரைஸ்மில் ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது42) மனநலம் பாதிக்கப்பட்டவர். இன்று காலை 8 மணியளவில் அந்தப் பகுதியில் உள்ள குழிபைப் சந்து அருகே தலையில் மற்றும் உடலில் பலத்த காயங்களுடன் நாகராஜ் இறந்து கிடந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை ஆய்வு செய்தனர். அப்போது யாரோ ஒருவர் அவரை உருட்டு கட்டையால் தலை மற்றும் உடலில் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. பின்னர் போலீசார் நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மனநலம் பாதிக்கப்பட்டவரை அடித்து கொலை செய்தவர் யார் என்பது குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News