உள்ளூர் செய்திகள்

கலெக்டர் மகாபாரதி.

அங்கன்வாடி பணியாளர்கள் 2 பேர் தற்காலிக பணிநீக்கம்- மயிலாடுதுறை கலெக்டர் அதிரடி

Published On 2023-04-14 09:45 GMT   |   Update On 2023-04-14 09:45 GMT
  • காலையில் குழந்தைகளுக்கு கொழுக்கட்டை வழங்கப்பட–வில்லை.
  • மதிய உணவிற்காக எந்த வித தயாரிப்பு பணிகளும் மேற்கொள்ளவில்லை.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப–தாவது:-

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றியம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படும் டி.

மணல்மேடு அங்கன்வாடி மையத்தில் கடந்த 12-ந்தேதி மாவட்ட கலெக்டர் மகாபாரதி திடீர் ஆய்வு மேற்கொண்டர்.

ஆய்வின் போது டி. மணல்மேடு குழந்தைகள் மைய பணியாளர் ரமா மற்றும் உதவியாளர்லதா ஆகியோர் பணியில் மெத்த னமாக இருந்துள்ளனர்.

உணவு பொருட்கள் பூச்சி மற்றும் வண்டுகள் இல்லாமல் பாதுகாக்கப்படவில்லை.

பதிவேடுகள் பராமரிக்கப்ப டவில்லை. காலையில் கொழுக்க ட்டை வழங்கப்பட– வில்லை. மதிய உணவிற்காக எந்த வித தயாரிப்பு பணி களும் மேற்கொள்ளவில்லை என்று ஆய்வின் போது தெரியவந்துள்ளது.

எனவே பணியில்குறைபாடுகள் காரணமாக டி. மணல்மேடு குழந்தைகள் மைய பணியாளர் ரமா மற்றும் குழந்தைகள் மைய உதவியாளர் லதா ஆகியோரை தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News