உள்ளூர் செய்திகள் (District)

முதியவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்லும் காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளை திருடி கொண்டு முதியவர் தப்பி ஓட்டம்

Published On 2022-07-27 09:19 GMT   |   Update On 2022-07-27 09:19 GMT
  • பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார்.
  • தன்னை ஏமாற்றி மோட்டார் சைக்கிளை முதியவர் திருடி சென்றது மூர்த்திக்கு தெரியவந்தது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி ஆர்ச்சில் பூவைத்தேடி கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் பழைய இருசக்கர வாகனங்கள் வாங்கி விற்பனை செய்யும் கன்சல்டிங் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிளை எடுத்து ஓட்டிச் சென்று பார்ப்பதாக கூறி சென்றார் ஆனால் வெகுநேரமாகியம் அவர் வராமல் மாயமாகி விட்டார்.

அப்போது தன்னை ஏமாற்றி மோட்டார் சைக்கிளை முதியவர் திருடி சென்றது மூர்த்திக்கு தெரியவந்தது.

இது குறித்து மூர்த்தி வேளாங்கண்ணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சிசிடிவி யில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News