உள்ளூர் செய்திகள் (District)

புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு 'சீல்'

Published On 2022-10-08 09:14 GMT   |   Update On 2022-10-08 09:14 GMT
  • போலீசார் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.
  • புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்ராமகிருஷ்ணன், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் டேனியல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் டென்னிசன், வீரப்பிள்ளை ஆகியோர் திருமருகல் பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பன்னீர்செல்வம் (வயது 65) என்பவரின் கடையில் புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது.

இதையடுத்து உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அந்த கடைக்கு 'சீல்' வைத்தனர்.

மேலும் கடைகளில் வைத்திருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News