உள்ளூர் செய்திகள் (District)

கடவுள் வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவ-மாணவிகள்.

கடவுள் வேடமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்கள்

Published On 2023-09-16 09:43 GMT   |   Update On 2023-09-16 09:43 GMT
  • சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நாரதர் போன்று வேடமிட்டு அனைவரையும் அசத்தினார்கள்.
  • கொசு என்று அரக்கனை அழிக்க அனைவரும் ஒன்று பட வேண்டும்.

திருவாரூர்:

திருவாரூர் மகரிஷி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ- மாணவி கள் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர். சிவன், பார்வதி, விநாயகர், முருகன், நாரதர், போன்று வேடமிட்டு வந்து அனை வரையும் அசத்தினார்கள்.

மேலும் டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க அனைத்து மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

வீட்டின் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உடைந்த பொருள்கள் மற்றும் ஆட்டுக்கல் கொடக்கல், உடைத்த தேங்காய் மூடி, போன்ற பொருள்களில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்து அப்புறப்படுத்த வேண்டும் என்ற வாசகத்தை கூறி கொசு என்று அரக்கனை அழிக்க அனைவரும் ஒன்று பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .

மேலும் காய்ச்சல் இருந்தால் உடனே மருத்து வரை அணுக வேண்டும் என்றும் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags:    

Similar News