உள்ளூர் செய்திகள் (District)

புளியமரத்தில் தவறி விழுந்த தொழிலாளி பலி

Published On 2023-03-02 09:46 GMT   |   Update On 2023-03-02 09:46 GMT
  • புளியமரத்தில் இருந்து தவறி விழுந்தார்.
  • சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக சிலம்பரசன் உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்துள்ள பச்சூர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது31), கூலி தொழிலாளி. இவர் புளியமரத்தில் இருந்து தவறி விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக சிலம்பரசன் உயிரிழந்தார்.

இது குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News