உள்ளூர் செய்திகள்

மளிகை வியாபாரி வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

Published On 2022-12-09 09:37 GMT   |   Update On 2022-12-09 09:37 GMT
  • தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் பகுதியில் கடந்த 2 -ந்தேதி வியாபாரம் செய்ய கோவை, பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார்.
  • வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது 12 பவுன் எடை கொண்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டு இருந்தது.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகிலுள்ள பவளத்தானுர் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 37). இவர் சொந்தமாக டெம்போ வைத்துக்கொண்டு ஊர் ஊராக சென்று மளிகை பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.

இந்நிலையில் விஜயன், தனது அம்மா பானுமதி, தம்பி பிரகாஷ் ஆகியோருடன் கடந்த 2 -ந்தேதி வியாபாரம் செய்ய கோவை, பழனி, தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய ஊர்களுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த விஜயன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். படுக்கை அறையில் உள்ள பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த பானுமதியின் தாலிக்கொடி மற்றும் செயின், பிரகாஷின் செயின் உட்பட சுமார் 12 பவுன் எடை கொண்ட ரூ. 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டு இருந்தது.

இது குறித்து விஜயன் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News