உள்ளூர் செய்திகள்

வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகை திருட்டு

Published On 2022-12-01 09:42 GMT   |   Update On 2022-12-01 09:42 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து 15 பவுன் நகையை திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.
  • புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் ராசப்பன் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கந்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்வம் (வயது 47). இவர் நில புரோக்கர்தொழில் மற்றும் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்த செல்வம் தான் அணிந்திருந்த செயின்,

கைச்செயின், 2 மோதி ரங்களை பெஞ்ச் மீது வைத்துவிட்டு அறைக்குள் சென்று தூங்கிக் கொண்டி ருந்தார். நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் அந்த பகுதிக்கு காரில் வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் வந்து கதவை உடைத்து உள்ளே புகுந்து பெஞ்சின் மீது வைத்திருந்த தங்க கழுத்து செயின், தங்க கைச்செயின் ,தங்க மோதிரம் இரண்டு ஆகிய 15 பவுன் நகையை திருடிக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று விட்டனர்.

அசந்து தூங்கிக் கொண்டிருந்த செல்வம் எழுந்து வந்து பெஞ்சில் வைத்திருந்த நகைகளை பார்த்த போது நகைகளை காணவில்லை.இது குறித்து செல்வம் நல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சிறப்பு சப் -இன்ஸ்பெக்டர் ராசப்பன் வழக்கு பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News