உள்ளூர் செய்திகள்

திருநங்கையுடன் சேர்ந்து வசித்த திருநம்பி 'திடீர்' மாயம்- போலீசில் புகார்

Published On 2023-02-22 11:07 GMT   |   Update On 2023-02-22 11:11 GMT
  • அம்மு பல இடங்களில் தேடியும் திருநம்பி செய்யது செரீப்பை கண்டு பிடிக்க முடியவில்லை.
  • மாயமான திருநம்பியை கண்டுபிடித்து தருமாறு போலீசாரிடம் புகார் செய்தார்.

திருவள்ளூர்:

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆனந்தி என்கிற அம்மு (35). திருநங்கையான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புட்லூர் பகுதியில் வசித்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சகோதரன் அமைப்பு மூலம் திருநம்பியாக மாறிய திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பாத்திமா என்கிற செய்யது செரீப் (21) என்பவரை அழைத்து வந்து தன்னுடன் தங்க வைத்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அம்முவின் வீட்டுக்கு சிலர் வந்து செய்யது செரீப்பை அழைத்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை. அவர் மாயமாகி இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அம்மு பல இடங்களில் தேடியும் திருநம்பி செய்யது செரீப்பை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசில் அம்மு புகார் செய்தார். அதில் மாயமான திருநம்பி செய்யது செரீப்பை கண்டுபிடித்து தருமாறு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News