ஆசிரியர்-காவலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை
- பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளுர் அடுத்த கைவண்டூர் கலைஞர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். அரசு பள்ளி ஆசிரியர். நேற்று காலை வீட்டில் இருந்த அனைவரும் கதவை பூட்டி விட்டு வெளியே சென்றனர். மாலையில் மூத்த மகன் வினோலியன் என்பவர் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிய அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 20 பவுன் நகை, ரூ. 5 ஆயிரம் ரொக்கம், 2 லேப்-டாப் ஆகியவை கொள்ளை போய் இருந்தது.
சென்னை, வடபழனி, அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாபு. காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஆஷா. இவர்களது மகன் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
ஆஷா நேற்று விஷேச நிகழ்ச்சி ஒன்றிற்கு செல்வதற்காக குடும்பத்துடன் புறப்பட்டார். அப்போது பீரோவில் இருந்த நகைகளை பார்த்தபோது 25 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. கடந்த செப்டம்பர் மாதம் ஆஷா வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உறவினர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிகிறது. அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.