உள்ளூர் செய்திகள் (District)

கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா

Published On 2023-10-05 07:09 GMT   |   Update On 2023-10-05 07:09 GMT
  • செய்யாறில் அரசு சார்பில் நடந்தது
  • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் அரசு சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார்.

ஒன்றிய குழு தலைவர்கள் திலகவதி ராஜ்குமார், ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் அபிராமி வரவேற்றார்.

ஒ.ஜோதி எம்.எல்.ஏ., எம்.கே.விஷ்ணு பிரசாத் எம்.பி. ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினர். விழாவில் நாவல்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் ஏ.சி.ஷர்மிளா பங்கேற்று கர்ப்பிணி களுக்கான ஊட்டச்சத்து, விழிப்புணர்வு கருத்துக்கள் மற்றும் தடுப்பூசி முறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இதில் நகராட்சி கவுன்சி லர்கள் கே.விஸ்வநாதன், ரமேஷ், கார்த்திகேயன், திமுக ஒன்றிய செயலா ளர்கள் என்.சங்கர், எம்.தினகரன், காங்கிரஸ் நிர்வாகிகள் ஆர், தில்லை.வீ.சந்துரு உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

Tags:    

Similar News