உள்ளூர் செய்திகள் (District)

வேடந்தாங்கல் சுப்ரமணிய சாமி கோவிலில் கிரிவலம்

Published On 2023-11-27 09:37 GMT   |   Update On 2023-11-27 09:37 GMT
  • கிருத்திகையொட்டி நடந்தது
  • வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது

காவேரிப்பாக்கம்:

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த வேடந்தாங்கலில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்ரமணியசாமி, வள்ளி ,தேவசேனா கோவிலில் கார்த்திகை மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

கோவிலில் மூலவர், உற்சவர் சுப்ரமணியசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வகையான நறுமண பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து பல வண்ண மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்பு மங்கள வாத்தியங்களுடன் பக்தர்கள் அரோகரா, அரோகரா என்று முழக்கமிட்டவாறு கிரிவலம் சென்றனர்.

இதில் பாணாவரம், சுற்றுவாட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News