உள்ளூர் செய்திகள் (District)

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்

இ-சேவை மையம் நடத்த ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2023-03-26 10:19 GMT   |   Update On 2023-03-26 10:19 GMT
  • இணையதள சேவைகளை மக்களுக்கான பொது இணையதளம் வழியாக வழங்கி வருகிறது.
  • மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதாகும்.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டமானது படித்த இளைஞர்களையும், தொழில் முனைவோர்க ளையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்கள் ஏற்படுத்திடும் வகையில் தொடங்கப்ப ட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது தமிழ்நாடு அரசு கேபிள் டிவி. நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் ஆகிய நிறுவனங்களின் மூலம் இ-சேவை மையங்களை செயல்படுத்தி மக்களுக்கான அரசின் சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்கி வருகிறது.

மேலும் அரசின் இணையதள சேவைகளை குடிமக்களுக்கான பொது இணையதளம் வாயிலாகவும் வழங்கி வருகிறது. இதனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையானது இ-சேவை மையங்கள் தொடங்கி பொதுமக்களுக்கான அரசின் இணைய வழி சேவைகளை அவரவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலேயே வழங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் நோக்கமானது அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இ-சேவை மையங்களை ஏற்படுத்தவும், மாவட்டங்களில் இ-சேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இ-சேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பி டத்திற்கு அருகிலேயே வழங்குவதாகும்.

எனவே தஞ்சை மாவட்டத்தில் அனைவருக்கும் இ-சேவை மையம் திட்டத்தின் கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்களிடம் இருந்து விண்ண ப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன. இணைய முறையில் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்ய இயலும். இந்த திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க www.tnesevai.tn.gov.in, tnega.tn.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தவும். அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதி வரை விண்ணப்பங்களை காலை 11.30 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பதிவு செய்ய இயலும். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.3 ஆயிரம் ஆகும். நகர்ப்புறத்திற்கான கட்டணம் ரூ.6 ஆயிரம் ஆகும். இந்த விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் முறையில் மட்டுமே செலுத்த வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு உரிய பயனாளர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News