உள்ளூர் செய்திகள் (District)

பெற்ற மகனை விஷம் கொடுத்து கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை

Published On 2023-11-17 09:35 GMT   |   Update On 2023-11-17 09:35 GMT
  • குழந்தைகளுக்கு பூச்சி மருந்து கொடுத்துவிட்டு முரளியும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
  • தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த பி. பள்ளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முரளி (42). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ஷகிரா. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட னர். இவர்களுக்கு சந்தர் (5), லூர்து என்ற 2 ஆண்குழந்தை கள் இருந்தனர். குடும்பத்த கராறில் இருவரும் பிரிந்து வாழ்ந்தனர்.

இருவருக்கும் சமரசம் ஏற்ப்பட்டு மீண்டும் சேர்ந்து வாழ்ந்தபோது மீண்டும் குடும்பதகராறு ஏற்ப்பட்டு பிரிந்துள்ளனர். இதனால் மனமுடைந்த முரளி கடந்த 24.8.2017 அன்று 2 ஆண் குழந்தைகளுக்கும் பூச்சி மருந்து கொடுத்துவிட்டு முரளியும் மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் சிகிச்சை பலனின்றி சந்தர் உயிரிழந்தார். இது தொடர்பாக பொம்மிடி போலிசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தருமபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இறுதிகட்ட விசாரணை முடிந்து முரளி குற்றம் செய்தது உறுதியான தைய டுத்து கொலை குற்றத்திற்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை முயற்சி வழக்கில் 5 வருடம் கடுங்காவல் தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும், தற்கொலை முயற்சி வழக்கில் 1 வருடம் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மோனிகா தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் சக்திவேல் வாதாடினார். 

Similar News