யானைக்கால் நோய் பாதித்தவர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம்
- ஜோலார்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழங்கப்பட்டது
- 88 பேர் பயனடைந்தனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருப்பத்தூர் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை, ஜோலார்பேட்டை வட்டார மருத் துவமனை இணைந்து தேசிய யானைக்கால் நோய் ஒழிப்பு திட்டத்தின் கீழ், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கும் முகாம் நடை பெற்றது. ஜோலார்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் மீனாட்சி தேவி தலைமை வகித்தார். மாவட்ட பூச்சியியல் வல்லுனர் ராமலிங்கம் திட்ட விளக்க உரையாற்றினார்.
ஜோலார்பேட்டை, புதுப்பேட்டை, பொன்னேரி, குன்னத் தூர், மண்டலவாடி, திரியாலம், உள்ளிட்ட ஜோலார்பேட்டை வட்டார அளவில் உள்ள பகுதிகளில் யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்ட88 நபர்களுக்கு திருப்பத்தூர் மாவட்டதுணை இயக்குனர் செந்தில் பராமரிப்பு பெட்டகம் வழங்கி சிறப்பு ரையாற்றினார்.
சுகாதார ஆய்வாளர்கள் கோபி, புகழேந்தி, தமிழ்வாணன், சுந்தரபாண்டியன் மற்றும் சுகாதார பணியா ளர்கள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துகிஷ் ணன் நன்றி கூறினார்.