உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

சேவூா் அருகே சாராயம் காய்ச்சிய 2பேர் கைது

Published On 2023-03-16 11:40 GMT   |   Update On 2023-03-16 11:40 GMT
  • கொட்டக்காட்டுபாளையத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
  • 5 லிட்டா் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனா்.

 அவினாசி :

சேவூா் அருகே உள்ள கொட்டக்காட்டுபாளையத்தில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசாா் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில் தனலட்சுமி (37) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது அங்கு சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசாா், தனலட்சுமி (37) அதே பகுதியைச் சோ்ந்த மணி (55) ஆகியோரை கைது செய்தனா். மேலும் அவா்களிடமிருந்த 5 லிட்டா் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனா். 

Tags:    

Similar News