உள்ளூர் செய்திகள் (District)
பனியன் தொழிலாளியை தாக்கிய 3பேர் கைது
- பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 25) , பனியன் தொழிலாளி.
- உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன்(22), மணிரத்தினம்(29),காமராஜ்(29) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில்குமார்(வயது 25) , பனியன் தொழிலாளி. இந்த நிலையில் நேற்று வேலைக்கு செல்வதற்காக அவர் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த அதே பகுதியைச் சேர்ந்த 3 வாலிபர்கள் செந்தில்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனை தட்டிக்கேட்ட அவரை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அவர் பல்லடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவரை தாக்கிய உப்பிலிபாளையத்தைச் சேர்ந்த பிரபாகரன்(22) ,மணிரத்தினம்(29) ,காமராஜ்(29) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.