உள்ளூர் செய்திகள் (District)

ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம்.

அண்ணாமலை பாதயாத்திரை குறித்து பல்லடத்தில் பா.ஜ.க.வினர் ஆலோசனை கூட்டம்

Published On 2023-09-29 09:49 GMT   |   Update On 2023-09-29 09:49 GMT
  • ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
  • பாதயாத்திரையை வெற்றி யாத்திரையாக்குவது என உறுதி ஏற்கப்பட்டது.

பல்லடம்:

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை என் மண்,என் மக்கள் என்ற தலைப்பில் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார்.இதன்படி திருப்பூர் மாவட்டத்தில் அடுத்த மாதம் அவர் பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த நிலையில் பாதயாத்திரை ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயலாளர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர்கள் வினோத் வெங்கடேஷ்,ஜோதிமணி, செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரத் தலைவர் வடிவேலன் வரவேற்றார்.

கூட்டத்தில் பல்லடம் நகருக்கு வருகை தரும் மாநில தலைவர் அண்ணாமலையை சிறப்பான முறையில் வரவேற்பது. பாதயாத்திரையில் நிர்வாகிகள்,தொண்டர்கள் குடும்பம், குடும்பமாக அனைவரும் பொதுமக்களுடன் பங்கேற்று பாதயாத்திரையை வெற்றி யாத்திரையாக்குவது என உறுதி ஏற்கப்பட்டது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்லடம் நகர்மன்ற உறுப்பினர்கள் சசிரேகா ரமேஷ்,ஈஸ்வரி செல்வராஜ்,மற்றும் பா.ஜ.க. மாவட்ட,ஒன்றிய ,நகர, கிளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News