உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்.

ஜனசதாப்தி ரெயில் இயக்கத்தில் மாற்றம்

Published On 2023-06-14 07:18 GMT   |   Update On 2023-06-14 07:18 GMT
  • கோவையில் இருந்து ஈரோடு, கரூர் வழியாக மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
  • 2 நாட்களுக்கு கோவையில் புறப்படும் ெரயில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும்.

திருப்பூர் :

கோவையில் இருந்து ஈரோடு, கரூர் வழியாக மயிலாடுதுறைக்கு ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்:12084) இயக்கப்படுகிறது.திருச்சி ரெயில் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தண்டவாள பராமரிப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால் இன்று மற்றும் நாளை ஆகிய 2 நாட்களுக்கு கோவையில் புறப்படும் ரெயில் திருச்சி வரை மட்டும் இயக்கப்படும்.

தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை செல்லாது. மறுமார்க்கமாக மாலை 4:50 மணிக்கு திருச்சியில் புறப்பட்டு இரவு 9:20 மணிக்கு கோவை வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Tags:    

Similar News