உள்ளூர் செய்திகள் (District)

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள்.

வெள்ளகோவிலில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-04 05:54 GMT   |   Update On 2023-05-04 05:54 GMT
சத்துணவு ஒன்றிய அமைப்பாளர் எஸ்.முருகன்,கே.எம்.பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ராமசாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வெள்ளகோவில்:

வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் ரதி தலைமையில், முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை மகளிர் சுய உதவிக் குழு மூலம் நிறைவேற்றுவதை கைவிட்டு சத்துணவு ஊழியர்களைக் கொண்டு நிறைவேற்றிட வலியுறுத்தி முதல்வரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சத்துணவு ஒன்றிய அமைப்பாளர் எஸ்.முருகன்,கே.எம்.பழனிசாமி, முன்னாள் மாவட்ட தலைவர் ராமசாமி உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் ஒன்றிய பொருளாளர் தேன்மொழி நன்றி கூறினார்.

Tags:    

Similar News