உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் பி.எச்டி., படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

Published On 2023-04-04 10:11 GMT   |   Update On 2023-04-04 10:11 GMT
இணையவழியில் விண்ணப்பிக்க, ஏப்ரல் 15-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர்:

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் பி.எச்டி., படிப்புக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 15-ந் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் பல்வேறு துறைகளிலும் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் ஜூலை மாதம் பி.எச்டி., ஆராய்ச்சி படிப்பிற்கான சேர்க்கை செயல்பாடுகள் நடந்து வருகின்றன. விண்ணப்பிக்க மார்ச் 31-ந் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இணையவழியில் விண்ணப்பிக்க, ஏப்ரல் 15-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. நுழைவுத்தேர்வு, நேர்காணல் மற்றும் பாரதியார் பல்கலைக்கழக விதிமுறைகளின் படி சேர்க்கை செயல்பாடுகள் நடக்கும். சேர்க்கை செயல்பாடு சார்ந்த விபரங்களை பல்கலைக்கழக இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் 

Tags:    

Similar News