உள்ளூர் செய்திகள் (District)
கருவம்பாளையத்தில் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம் எம்.எஸ்.ஆர். ராஜ் தலைமையில் நடந்தது
தமிழகம் முழுவதும் உடன்பிறப்பு களாய் இணைவோம் என்ற தலைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தி.மு.க. வினர் சார்பில் நடைபெற்று வருகிறது.
திருப்பூர்:
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறு த்தலின்படி, தமிழகம் முழுவதும் உடன்பிறப்பு களாய் இணைவோம் என்ற தலைப்பில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் தி.மு.க. வினர் சார்பில் நடைபெற்று வருகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மும்முரமாக நடந்து வருகிறது. திருப்பூர் மாநகரா ட்சி 43-வது வார்டு கரு வம்பாளையம் பகுதியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எம்.எஸ்.ஆர். ராஜ் தலைமையில் முகாம் நடந்தது.
இதில் வட்ட செயலாளர் பி.கே.கணேஷ் முன்னிலை வகித்தார். இதில் தி.மு.க. நிர்வாகிகள் தம்புராஜ், சிட்டி பாபு, ஜின்னா பாய், சுலோச்சனா, கண்ணன், சிவக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கழக அறுவுறுத்தலின்படி உறுப்பினர்கள் சேர்க்கை நடந்தது.