உள்ளூர் செய்திகள்

 தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இல.பத்மநாபன். 

அமைச்சர்கள் பங்கேற்கும் திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

Published On 2022-11-09 08:16 GMT   |   Update On 2022-11-09 08:16 GMT
  • 12 ந்தேதி காலை 10.00 மணியளவில் தாராபுரம், என்.ஜி.மஹாலில், நடைபெற உள்ளது.
  • சிறப்பு அழைப்பாளர்களாக செய்தித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்கள்.

திருப்பூர் :

திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் இல.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.கழக பொது உறுப்பினர்கள் கூட்டம் வருகின்ற 12 ந்தேதி (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் தாராபுரம், என்.ஜி.மஹாலில், மாவட்டக் கழக அவைத்தலைவர் இரா.ஜெயராமகிருஷ்ணன் தலைமையிலும், எனது (இல.பத்மநாபன்) முன்னிலையிலும் நடைபெறஉள்ளது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர், தமிழக செய்தித்துறை அமைச்சர் .மு.பெ.சாமிநாதன், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறைஎன்.கயல்விழி செல்வராஜ் கலந்துகொள்ள உள்ளார்கள்.அதுசமயம், திருப்பூர் தெற்கு மாவட்ட தி.மு.கழகத்திற்குட்பட்ட மாநில.

மாவட்டக் கழக நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற நகர, பேரூர் கழக நிர்வாகிகள், இந்நாள் உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகள், மாவட்டக் கழக பிரதிநிதிகள், சார்பு அணிகளின் இந்நாள்- முன்னாள் நிர்வாகிகள். கழகத்தின் செயல் வீரர்கள் தவறாது கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Tags:    

Similar News