உள்ளூர் செய்திகள் (District)

இறந்து கிடந்த முதியவர்.

அடையாளம் தெரியாத முதியவர் பிணம்

Published On 2022-07-21 07:33 GMT   |   Update On 2022-07-21 07:33 GMT
  • முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.
  • அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை.

பல்லடம்:

பல்லடம் பஸ் நிலையம் கண்ணன் ஓட்டல் எதிரில் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார்.அவரை 108 ஆம்புலன்ஸ் குழுவினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. அவரை பற்றி தகவல் தெரிந்தவர்கள் பல்லடம் போலீஸ் நிலையத்தை அணுகி விவரம் தெரிவிக்குமாறு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News