உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

பனப்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

Published On 2023-03-01 05:16 GMT   |   Update On 2023-03-01 05:16 GMT
  • மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
  • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

 திருப்பூர் :

திருப்பூர் கோட்டம் பனப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த துைண மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

அதன்படி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மாதேஸ்வரன் நகர், வெங்கடேஸ்வரா நகர், நல்லூர் பாளையம், கவுண்டம்பாளையம், கவுண்டம்பாளையம் புதூர், மலையம்பாளையம், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News