உள்ளூர் செய்திகள் (District)

கோப்புபடம்

அவிநாசி அருகே ஸ்கேட்டிங் போட்டி

Published On 2023-08-30 10:49 GMT   |   Update On 2023-08-30 10:49 GMT
  • ஸ்கேட்டிங் போட்டிகள் அவிநாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றன.
  • காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா்.

திருப்பூர் : 

திருப்பூா் மாவட்ட ரோலா் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் அசோசியேஷன், திருப்பூா் ரோல்ஸ்ப்ரோ அகாதெமி சாா்பில் ஸ்கேட்டிங் போட்டிகள் அவிநாசி அருகேயுள்ள தனியாா் பள்ளியில் நடைபெற்றன. 200 மீட்டா், 400 மீட்டா், 1000 மீட்டா் பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளை திருப்பூா் மாநகர காவல் ஆணையா் பிரவின்குமாா் அபிநபு தொடங்கி வைத்தாா்.இதில் 4 வயது முதல் 19 வயதுக்குள்பட்ட 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டிகளை மாவட்ட ரோலா் ஸ்போா்ட்ஸ் அசோசியேஷன் மாவட்டச் செயலாளா் பிரகாஷ், தலைவா் தெய்வராஜ், துணைச்செயலாளா் ஜெயகுமாா் ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.

அறக்கட்டளை நிா்வாக இயக்குநா் இந்திரா சுந்தர்ராஜம் கூறுகையில், மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் சென்னையில் விரைவில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

Tags:    

Similar News