உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

குன்னத்தூரில் பாம்பு கடித்து பெண் பலி

Published On 2023-08-15 10:10 GMT   |   Update On 2023-08-15 10:10 GMT
  • தனது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நின்று கொண்டிருந்துள்ளாா்.
  • மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

குன்னத்தூர்:

குன்னத்தூா், வெள்ளிரவெளி கரையாம்புதூரைச் சோ்ந்தவா் அய்யாதுரை மனைவி செல்வராணி (வயது 50). இவா் தனது வீட்டு வாசலில் ஞாயிற்றுக்கிழமை மாலை நின்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அவரை விஷப்பாம்பு கடித்துள்ளது.

இதையடுத்து அவா் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து குன்னத்தூா் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். 

Tags:    

Similar News