உள்ளூர் செய்திகள் (District)
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
- 17 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் பள்ளி விடுமுறைக்கு இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
- சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கண்டியன்கோவில் பகுதியில் வசித்து வருபவர் விமல்ராஜ் (வயது26) .இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இந்த நிலையில், இவரது உறவினரான 17 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் பள்ளி விடுமுறைக்கு இவரது வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தை வெளியில் கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளார். இதேபோல மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கர்ப்பமான அந்த சிறுமிக்கு நேற்று முன்தினம் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி கொடுத்த புகாரின் பேரில், விமல் ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து, பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.