ஐம்பொன் அய்யப்பர் சிலைக்கு கும்பாபிஷேகம்
- ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்
- அன்னதானம் வழங்கப்பட்டது
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அடுத்த வயலூர், கிராமத்தில் ஐம்பொன் ஐயப்ப சிலை நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடந்தது. வயலூர் கிராமத்தில் உள்ள திரௌ பதி அம்மன் கோவில் வளாகத்தில் யாக குண்டம் அமைத்து நவகிரக, மற்றும் ஐயப்ப, விநாயகர், உள்பட 12 புனித நீர் கலசங்களை வைத்து. பல்வேறு மூலிகைகள் மூலம் யாகம் வளர்க்க ப்பட்டு, புனித நீர் கலசங்களை கோவிலை சுற்றி வந்து கோவில் வளாகத்தில் ஐம்பொன் ஐயப்பன் சிலை மீது புனித நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.
இதில் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. நேற்று இரவு 18 படி கன்னிசாமி பூஜை மற்றும் தெய்வீக நாடகம் நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை வயலூர் கிராம ஐய்யப்ப சாமிகள், மற்றும் ஊர் பொதுமக்கள், செய்திருந்தனர்.