- போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் நடவடிக்கை
- நோட்டீஸ் அளித்து காலஅவகாசம் அளித்தனர்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதிய பேருந்து நிலையம் பழைய பேருந்து நிலையம் கோட்டை மைதானம் ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தது.
ஆக்கிரமிப்பு அகற்றம்
இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதால் கோட்டை மைதானம் சுற்றியுள்ள அரசு அலுவலங்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர்.
இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி மற்றும் ஆரணி வருவாய் துறையினர் ஏற்கனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நோட்டீஸ் அளித்து காலஅவகாசம் வழங்கினார்கள்.
இதனையடுத்து நகராட்சி ஆணையர் தமிழ்செல்வி தாசில்தார் ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் கோட்டை வீதி பேருந்து நிலையங்கள் செல்லும் வழியில் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினார்கள்.
ஆரணி முக்கிய வீதிகளான பேருந்து நிலையங்கள் மற்றும் கோட்டை வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றியதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர்.