உள்ளூர் செய்திகள்

கூடலூா் அருகே நடுரோட்டில் சாய்ந்த மரத்தால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Published On 2023-07-22 09:13 GMT   |   Update On 2023-07-22 09:13 GMT
  • கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.
  • தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், கூடலூா், பந்தலூா் பகுதிகளில் கடந்த ஒருவார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் கூடலூா் - கோழிக்கோடு சாலை பொன்வயல் பகுதியில் மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது.

தகவலறிந்த தீயணைப்புத் துறையினா் விரைந்து சென்று பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அகற்றினா். இதனால், கூடலூரிலிருந்து கேரள மாநிலம் செல்லும் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதேபோல செம்பாலா பகுதியிலும் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீராக்கினா். 

Tags:    

Similar News