உள்ளூர் செய்திகள்
திருச்சி அரியமங்கலத்தில் வீட்டில் இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு
- திருச்சி அரியமங்கலத்தில் வீட்டில் இருந்த 50 ஆயிரம் மதிப்புள்ள நகை, பணம் திருட்டு போனது
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு கோகிலா என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று கோகிலா தனது வீட்டை பூட்டிவிட்டு வீட்டின் சாவியை ஸ்விட்ச் போர்டு அருகில் வைத்துவிட்டு வேலைக்கு சென்று விட்டார். பிறகு வேலை முடித்துவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 50 ஆயிரம் மதிப்புள்ள பணம் மற்றும் நகை திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து அரியமங்கலம் போலீசில் கோகிலாவின் தாய் மஞ்சுளா புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு பணம், நகைகளை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.