உள்ளூர் செய்திகள் (District)

திருச்சியில் மயங்கி விழுந்து இறந்த முதியவர் - போலீசார் விசாரணை

Published On 2022-08-24 10:03 GMT   |   Update On 2022-08-24 10:03 GMT
  • தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா தனது எல்லை கிராம பகுதியில் நேற்று ரோந்து பணி சென்றார்.
  • திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு முன்பாக சுமார் 62 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்த நிலையில் கிடந்தார்.

திருச்சி,

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லை பகுதியான தேவதானம் சிந்தாமணி கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணபிரியா தனது எல்லை கிராம பகுதியில் நேற்று ரோந்து பணி சென்றார். அப்போது சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கு முன்பாக சுமார் 62 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து இறந்த நிலையில் கிடந்தார். அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அவர் பெயர் ராமதாஸ் என்றும், மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிந்தது.

ஆனால் முழுமையான முகவரி எதுவும் கிடைக்கவில்லை. இதுபற்றி கிருஷ்ணபிரியா கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

அவர் தொடர்பான தகவல்கள் இருந்தால் கோட்டை காவல் நிலையம் (94981 00628), இன்ஸ்பெக்டர் தயாளன் (94981 56633), சப்-இன்ஸ்பெக்டர் சட்டநாதன் (94981 56879) ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

Tags:    

Similar News