- ஆடிட்டர் தீக்குளித்து உயிரிழந்தார்
- உடல் கருகிய அவரை ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
திருச்சி,
திருச்சி கே.கே.நகர் பெரியார் நகர் ஆர்.பி.எப்.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தேவசகாயம். இவரது மகன் அமுல்ராஜ்(வயது 36). ஆடிட்டரான இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் புது பஸ் நிலையம் அருகில் வெங்கடேசபுரத்தைச் சேர்ந்த ரோஸ்லின் சுகன்யா (வயது 30) என்ற பெண்ணுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் அவரது மனைவி ரோஸ்லின் சுகன்யா தனியாக பிரிந்து தாய் வீட்டில் சென்று வசித்து வருகிறார். இதற்கிடையில் அவரது குடும்பத்தில் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த நிலையில் இருந்த ஆடிட்டர் அமல்ராஜ் சம்பவத்தன்று திருச்சி ரயில்வே ஜங்ஷன் நுழைவாயில் அருகே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். உடல் கருகிய அவர் ஆம்புலன்ஸ் மூலமாக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருச்சி கண்ேடான்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார். இறந்து போன ஆடிட்டர் அமுல்ராஜ் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.