உள்ளூர் செய்திகள்

பார் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு

Published On 2023-08-10 08:51 GMT   |   Update On 2023-08-10 08:51 GMT
  • மேல கல்கண்டார்கோட்டை பார் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பு
  • கத்தி முனையில் பணம் பறித்த வாலிபர் கைது

திருச்சி, 

திருச்சி மேலக்கல்கண்டார் கோட்டை பஸ் நிறுத்தம் அருகே டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. அங்குள்ள மதுக்கடை பாரில் திருச்சி கக்கன் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் (வயது 34) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த வாலிபர் இவரை வழிமறித்து கத்தி முனையில் பணத்தை பறித்து விட்டு சென்று விட்டார். இதுகுறித்து முருகானந்தம் பொன்மலை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் வழக்கு பதிவு செய்து மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்த சிவக்குமார் என்கிற முகமது ரபி என்ற வாலிபரை கைது செய்தார் . அவரிடம் இருந்து பணம் மற்றும் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

Similar News