உள்ளூர் செய்திகள்

உப்பிலியபுரத்தில் புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கம்-எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-06-24 09:27 GMT   |   Update On 2022-06-24 09:27 GMT
  • உப்பிலியபுரத்திலிருந்து மாசிபெரியண்ணசாமி கோவிலுக்கு பேருந்நு வசதி வண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததனர்
  • அதே போல் உப்பிலியபுரத்திலிருந்து பி.மேட்டூர் வழியாக கருப்பம்பட்டிக்கு புதிய வழிதடப்பேருந்தும் துவக்கி வைக்கப்பட்டது.

திருச்சி:

உப்பிலியபுரத்திலிருந்து இரண்டு புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகளை துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் துவக்கி வைத்தார்.

உப்பிலியபுரத்திலிருந்து மாசிபெரியண்ணசாமி கோவிலுக்கு பேருந்நு வசதி வண்டி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்ததனர்.

இதைத் தொடர்ந்து இன்று காலை உப்பிலியபுரம் கோட்டப்பாளையம் பி.மேட்டூர் கலகலாத்துக்கோம்பை வழியாக பெரியண்ணசாமி கோவிலுக்கு பயணப்பட்ட பேருந்தை எம்.எல்.ஏ. ஸ்டாலின்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அதே போல் உப்பிலியபுரத்திலிருந்து பி.மேட்டூர் வழியாக கருப்பம்பட்டிக்கு புதிய வழிதடப்பேருந்தும் துவக்கி வைக்கப்பட்டது.

இது நாள் வரை மாசி பெரியண்ணசாமி கோவில், கருப்பம்பட்டி ஆகிய இடங்களிலிருந்து சுமார் 5 கிமீ தொலைவை பொதுமக்கள் நடந்து வந்தே கடந்து வந்ததும், இன்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News