திருச்சி அருகே விபத்து-கார் மோதி கல்லூரி மாணவி பலி
- கார் மோதி கல்லூரி மாணவி பலியானார்
- அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
திருச்சி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேயுள்ள நாகுடி பகுதியைச் சேர்ந்தவர் சண்முக–சுந்தரம். இவரது மகள் ஹரி–நிஷா (வயது 17). இவர் திருச்சி அருகே பூலாங்குளத்துப் பட்டியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் தனது கல்லூரி விடுதி தோழி வினோதினியுடன் பூலாங்குளத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் அமைந்துள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு பணம் எடுக்க சென்றனர். பின்னர் வினோதினி ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று பணம் எடுத்துக் கொண்டி–ருந்தார்.
ஹரி–நிஷா வெளியே சாலை–யோரம் நின்று கொண்டி–ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வழியாக மின்னல் வேகத்தில் சென்ற கார் ஹரி–நிஷா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு ஹரி–நிஷா ஏற்க–னவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து வினோதினி இனாம்குளத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாலையோரம் நின்ற மாணவி கார் மோதி பலி–யான சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரப–ரப்பை ஏற்படுத்தியது.