உள்ளூர் செய்திகள் (District)
- திருச்சியில் மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
- ஏராளமானோர் மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்
திருச்சி,
ஊதிய உயர்வு நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும், 1. 12 .2019க்கு பிறகு பணியில் சேர்ந்த கேங்மேன் உள்ளிட்ட அனைவருக்கும் 6 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டக் கிளை சார்பில் இன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன், டி.என்.பி.இ.ஓ மாநில துணைப் பொதுச் செயலாளர் இருதயராஜ், டி.என்.இ.பி. டபிள்யு.ஒ. வட்ட செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினர்.இதில் ஏராளமானோர் மின்வாரிய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் பழனியாண்டி நன்றி கூறினார்.