திருச்சியில் 6,200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு தளம் திறப்பு விழா
- திருச்சியில் 6,200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன சேமிப்பு தளம் திறப்பு விழா நடைபெற்றது
- புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டபட்டது
திருச்சி:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்திலி–ருந்து காணொளி காட்சி வாயிலாக இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் பல்வேறு மாவட்டங்களில் மேற்கூரையுடன் அமைக்கப்பட்டுள்ள நவீன சேமிப்புத் தளங்களைத் திறந்து வைத்தார். மேலும், புதிய வட்ட செயல்முறைக் கிடங்குகள் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அதவத்தூரில் 6,200 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கான்கிரீட் தளத்துடன் கூடிய மேற்கூரை திறப்பு விழா நிகழ்வில் மாவட்ட கலெக்டர் மா.பிரதீப்குமார், கலந்து கொண்டு குத்து–விளக்கேற்றி சேமிப்பு கிடங்கு வளாகத்தினை பார் வையிட்டார். இதில், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பால–முருகன், வட்டாட்சியர் குணசேகரன், உதவி செயற் பொறியாளர் ராஜி, உதவி பொறியாளர் சிவக்குமார், தொழிலாளர் முன்னேற்ற சங்க நிர்வாகிகள், பொது–மக்கள் கலந்து கொண்டனர்.